சீனாவில் வெடிப்புச் சம்பவத்தில் இருவர் மரணம். 55 பேருக்குக் காயம்.
சீனாவின் ஹங்சோய் நகரில் நடந்த வெடிப்புச் சம்பவத்தில் இருவர் மாண்டனர். 55 பேர் காயமடைந்தனர்.
சீனாவின் ஹங்சோய் நகரில் நடந்த வெடிப்புச் சம்பவத்தில் இருவர் மாண்டனர்.
55 பேர் காயமடைந்தனர்.
பரபரப்பான சாலையில் உள்ள கடை ஒன்றில் அந்தச் சம்பவம் நடந்தது.
தீப்பற்றிக் கொண்ட கடையிலிருந்து கரும்புகை கிளம்புவதைக் காட்டும் காணொளிகள் சமூகத் தளங்களில் பரவின.
தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்தோரில் 12 பேருக்குக் கடும் காயமேற்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடக்கிறது.