Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கிரீஸ் வெள்ளம் - 15 பேர் மரணம், 30க்கும் அதிகமானோர் காயம்

வீடுகளும் வர்த்தகப் பகுதிகளும் பாதிக்கப்பட்டதாக மீட்புக் குழுக்கள் கூறின.

வாசிப்புநேரம் -
கிரீஸ் வெள்ளம் - 15 பேர் மரணம், 30க்கும் அதிகமானோர் காயம்

(படம்:REUTERS)

கிரீஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 15 பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தது 37 பேர் காயமடைந்துள்ளனர்.

சிலரைக் காணவில்லை என்றும் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒரு வாரமாக வானிலை மோசமாக இருந்தது.

தலைநகர் ஏதன்ஸுக்கு அருகே நேற்று இரவு திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

(படம்:REUTERS)

வீடுகளும் வர்த்தகப் பகுதிகளும் பாதிக்கப்பட்டதாக மீட்புக் குழுக்கள் கூறின.

சாலைகள் முழுதாகச் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

மாண்டோரில் பலர் முதியோர் என்றும் அவர்களின் சடலங்களை வீடுகளிலிருந்து மீட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

(படம்:REUTERS)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்