வாசிப்புநேரம் -
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர். 42 பேர் காயமுற்றனர்.
மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சுப் பேச்சாளர் தெரிவித்தார்.
காவல்துறை அதிகாரிகள் அந்த இடத்தில் பொதுமக்கள் புழக்கத்தைத் தடுத்து வைத்துள்ளனர்.
ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் வட்டாரம் அது என்று கூறப்பட்டது.
தாக்குதலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை.