பிரான்ஸ்: இசை நிகழ்ச்சியின்போது சீறித் தாக்கிய மின்னல்
பிரான்ஸ்: இசை நிகழ்ச்சியின்போது சீறித் தாக்கிய மின்னல்
ஆஸிரெயில்ஸ், பிரான்ஸ்: பிரான்ஸின் வடகிழக்குப் பகுதியில் இசை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த சமயத்தில் திடீரென மின்னல் தாக்கியது. அதில் 15 பேர் காயமுற்றனர்.
காயமுற்றோரில் கூடாரத்துக்குள் உட்கார்ந்து இசையைக் கேட்டுக்கொண்டிருந்த சில குழந்தைகளும் அடங்குவர்.
பிரான்ஸில் பொதுவாக இந்த மாதங்களில் மோசமான சூறாவளி, மின்னல் சீற்றங்கள் ஏற்படுவதுண்டு.
இதனால் எச்சரிக்கைகளும் விடுக்கப்படும்.
நேற்று நடந்த மின்னல் தாக்குதலைத் தொடர்ந்து, திறந்தவெளி நிகழ்ச்சிகள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்தி: