Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நியூயார்க்கில் காரை ஏற்றி மரணம் விளைவித்த ஆடவர்

நியூயார்க்கில் காரை ஏற்றியதில் ஒருவர் மரணம்; 22 பேர் காயம்

வாசிப்புநேரம் -
நியூயார்க்கில் காரை ஏற்றி மரணம் விளைவித்த ஆடவர்

(படம்: Reuters)

நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் பாதசாரிகள்மீது கார் ஒன்று மோதியதில் 18 வயதுப் பெண் மாண்டார்.

22 பேர் காயமடைந்தனர். அவர்களில் நால்வரின் நிலை மோசமாய் இருப்பதாகக் கூறப்படுகிறது.

காரை மோதிய 26 வயது ஓட்டுநரை அதிகாரிகள் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.

அவர் கடற்படையில் பணியாற்றுபவர் என்றும், ஏற்கனவே அவர் மீது சில குற்றச்சாட்டுகள் இருந்திருக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை என நகர மேயர் கூறினார்.

அவர் மதுபானம் அருந்தவில்லை எனச் சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டனர்.
போதைப்பொருள் சோதனைக்கான முடிவுகள் இன்னமும் வெளிவரவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரின் முக்கிய கட்டடங்களில் பாதுகாப்பு அம்சங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்