Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

டெக்ஸஸ்: கனரக வாகனத்தில் பரிதாபமாய் மாண்டு கிடந்த 8 பேர்

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் சான் அன்டோனியோ நகரில், கனரக வாகனத்தில் அடைக்கப்பட்டுக் கிடந்த எட்டுப் பேர் மாண்டுகிடக்கக் காணப்பட்டதாக அந்நகரக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

வாசிப்புநேரம் -
டெக்ஸஸ்: கனரக வாகனத்தில் பரிதாபமாய் மாண்டு கிடந்த 8 பேர்

(சம்பவத்தை விசாரித்துவரும் சான் அண்டோனியோ காவல் அதிகாரிகள், படம்: AP /Eric Gay)

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தின் சான் அன்டோனியோ நகரில், கனரக வாகனத்தில் அடைக்கப்பட்டுக் கிடந்த எட்டுப் பேர் மாண்டுகிடக்கக் காணப்பட்டதாக அந்நகரக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் 30 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 17 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் குடியேறிகளாக இருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

அந்த வாகனம் வால்மார்ட் கடைத்தொகுதியின் கார் நிறுத்தத்தில் காணப்பட்டதாகக் காவல் துறையினர் கூறினர்.

அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர்களுக்கு நீர்ச்சத்துக் குறைவும் ஏற்பட்டிருந்தது. அது பயங்கரமான ஆட்கடத்தல் குற்றம் எனக் காவல்துறையினர் வருணித்துள்ளனர்.

கனரக வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது குறித்து வால்மார்ட் ஊழியர் தகவல் தந்ததாகக் காவல் துறையினர் கூறினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்