லோரிய (L'Oreal) நிறுவனத்தின் வாரிசான திருவாட்டி லிலியன் பெட்டன்கோர்ட் 94 வயதில் காலமானார்.
அவர் உலகின் ஆகப் பணக்காரப் பெண்மணி என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு அவரது சொத்துக்களின் மதிப்பு சுமார் 33 பில்லியன் யூரோ.
2012-ஆம் ஆண்டு, வயதின் தள்ளாமை காரணமாக நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிலிருந்து திருவாட்டி லிலியன் விலகிக்கொண்டார்.
லோரிய நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சிறந்த பங்காற்றியவர் திருவாட்டி லிலியன். அவர் ஒரு சிறந்த பெண்மணியும் கூட, என்று நினைவுகூர்ந்தனர் நிறுவனத்தின் ஊழியர்கள்.