மலேசியா - நாடாளுமன்றத்தில் சபா நிலநடுக்கம் குறித்த விவாதம்
சபா நிலநடுக்கம் குறித்து, மலேசிய நாடாளுமன்றம் விவாதிப்பதன் தொடர்பில் தீர்மானம் கொண்டுவருவதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 18 வயதுக்கு உட்பட்டவர்கள், மலையேறுவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது என்பது அவற்றுள் ஒன்று.
கோலாலம்பூர், மலேசியா: சபா நிலநடுக்கம் குறித்து, மலேசிய நாடாளுமன்றம் விவாதிப்பதன் தொடர்பில் தீர்மானம் கொண்டுவருவதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 18 வயதுக்கு உட்பட்டவர்கள், மலையேறுவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது என்பது அவற்றுள் ஒன்று. அதற்கு மலேசியர்களிடம் இருந்து மாறுபட்ட கருத்துகள் வந்ததாக The Star நாளேடு தெரிவித்தது.
வயதானவர்களுக்கு அவசரகாலத்தில் எவ்வாறு பாதுகாப்பாக நடந்துகொள்வது என்பது தெரியும் என்று பலர் கருத்துரைத்தனர். அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கம், ஓர் இயற்கைப் பேரிடர் என்று கூறிய பலர், மலையேறுவதற்கும் வயதுக்கும் தொடர்பு இல்லை என்று கூறினர்.