Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவில் உருளைக்கிழங்கு மூட்டைகள் வைக்கப்படிருந்த கிடங்கு இடிந்துவிழுந்ததில் 14 பேர் மரணம்

வாசிப்புநேரம் -
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உருளைக்கிழங்கு மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த கிடங்கின் கூரைப்பகுதி இடிந்துவிழுந்து குறைந்தது 14 பேர் மாண்டனர்.

சம்பவம் சந்தௌசி (Chandausi) எனும் பகுதியில் கடந்த வியாழக்கிழமை (16 மார்ச்) நடந்ததாக Bernama கூறுகிறது.

இடிபாடுகளிலிருந்து 10 பேர் மீட்கப்பட்டனர்.

மாண்டவர்களின் குடும்பத்தாருக்கும் காயமடைந்தவர்களுக்கும் உத்தரப் பிரதேச அரசாங்கம் இழப்பீட்டுத்தொகை அறிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அனுதாபம் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணம்பெற வேண்டிக்கொள்வதாகவும் அவர் சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்