இந்தோனேசியா: தொடர்ந்து மூடியிருக்கும் விமான நிலையங்கள்
இந்தோனேசியாவில் சுரபாயா உட்பட 5 விமான நிலையங்கள் இன்றும் விமானப் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன. கிழக்கு ஜாவாவின் ரவுங் எரிமலையின் குமுறல் அதிகரித்ததைத் தொடர்ந்து விமான நிலையங்களின் செயல்பாடுகளை நிறுத்துமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இந்தோனேசியாவில் சுரபாயா உட்பட 5 விமான நிலையங்கள் இன்றும் விமானப் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன. கிழக்கு ஜாவாவின் ரவுங் எரிமலையின் குமுறல் அதிகரித்ததைத் தொடர்ந்து விமான நிலையங்களின் செயல்பாடுகளை நிறுத்துமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
விமான நிலையம் மூடப்பட்டதால், நோன்புப் பெருநாளைக் குடும்பத்தினருடன் கொண்டாடத் திட்டமிட்டிருந்த ஆயிரமாயிரம் முஸ்லிம்கள் ஏமாற்றமடைந்தனர். ரவுங் எரிமலை கடந்த ஒரு வாரமாக வெடித்துச் சிதறிக்கொண்டிருக்கிறது.