Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

"ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறேன்... அதனால் என்னைப் பதவியிலிருந்து இறக்க முயல்கின்றனர்" - மலேசியப் பிரதமர்

வாசிப்புநேரம் -
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தாம் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதால் தம்மை எதிர்க்கட்சியினர் பதவியிலிருந்து வெளியேற்ற முயல்வதாகக் கூறியிருக்கிறார்.

திரு. அன்வார் அவர்களை அவர் கடுமையாகச் சாடினார்.

பழைய தலைவர்களைப் போல் ஊழல் புரிபவர்களை காப்பாற்றிக் கொண்டிருக்கப் போவதில்லை என்று அவர் சொன்னார். ஊழலுக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாக அவர் சொன்னார்.

மலேசியாவில் இன, சமய உணர்வைத் தூண்டுபவர்களையும் அவர் எச்சரித்தார். நாட்டின் இன, சமய ஒற்றுமையைக் குலைக்க விரும்புவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

பிரதமர் பொறுப்புக்கு வந்த பிறகு முதல்முறையாக அவர் தமது PKR கட்சி மாநாட்டில் பேசினார்.

அரசாங்க ஆட்சியைக் கவிழ்த்துவிடத் திட்டமிடுபவர்களுக்கும் திரு. அன்வார் கடுமையான எச்சரிக்கையை முன்வைத்தார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்