சீனாவின் சுஹாய் நகரில் Omicron பரவல் - பொதுப் பேருந்துப் பாதைகள் தற்காலிக நிறுத்தம்
சீனாவின் சுஹாய் (Zhuhai) நகரில் குறைந்தது 7 ஓமக்ரான் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பொதுப் பேருந்துப் பாதைகள் தற்காலிகமாய் நிறுத்தப்பட்டுள்ளன.
கடலோர நகரமான சுஹாய், மகாவுக்கு (Macau) அருகில் உள்ளது.
அதனருகில் உள்ள சொங்ஷான் (Zhongshan) நகரில் ஓமக்ரான் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டதால் அங்கு பெரிய அளவில் COVID-19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சுஹாய் அதிகாரிகள் அத்தியாவசியத் தேவை ஏற்பட்டால் மட்டுமே நகரத்தைவிட்டு வெளியேறுமாறு குடியிருப்பாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வெளியேற விரும்புவோர் கடந்த 24 மணிநேரத்திற்குள் COVID-19 பரிசோதனை செய்ததற்கான ஆதாரத்தைக் காட்டவேண்டும் என்றும் அதிகாரிகள்
கூறியுள்ளனர்.
இந்நிலையில் அழகு நிலையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், சூதாட்டக் கூடங்கள், திரையரங்குகள் முதலியன மூடப்பட்டுள்ளன.
-AFP