Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

"விரோதச் சக்திகளை ஒடுக்குவோம்": சீனக் கம்யூனிஸ்ட் கட்சி

வாசிப்புநேரம் -
"விரோதச் சக்திகளை ஒடுக்குவோம்": சீனக் கம்யூனிஸ்ட் கட்சி

(படம்: AFP)

விரோதச் சக்திகளின் ஊடுருவல், சதி நடவடிக்கைகளுக்கு எதிராக ஒடுக்குமுறை தேவை என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல், சட்ட விவகாரங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

சீனாவின் வெவ்வேறு பகுதிகளில் மக்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து அந்தக் கருத்துகள் வந்துள்ளன.

வாரயிறுதியின்போது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டோர் பற்றி அதிகாரிகள் விசாரிக்கத் தொடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

தலைநகர் பெய்ச்சிங், ஷங்ஹாய் ஆகிய நகரங்களில் கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகள் நீக்கப்படவேண்டும் என்று நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பரித்தனர்.

சீனக் காவல்துறை அதிகாரிகள் சில ஆர்ப்பாட்டக்காரர்களைத் தொடர்புகொண்டு தகவல்களைக் கோரியதாகக் கூறப்பட்டது.

சீனாவில் நடப்பில் உள்ள கடுமையான நடவடிக்கைகளால் மக்கள் சினமடைந்துள்ளனர். 

கிழக்கில் உள்ள ஜி-நான் (Ji-nan) நகரில் முடக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற முயன்றனர்.

தடுப்புகளை மீறி அவர்கள் காவல்துறை அதிகாரிகளை அணுகியதாகத் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்