சீனாவில் குறைந்துவரும் COVID-19 தொடர்பான மரணங்கள்...
சீனா விடுமுறைக் காலத்தின்போது COVID-19 தொடர்பான மரணங்கள் கணிசமாய்க் குறைந்ததாகத் தெரிவித்திருக்கிறது.
உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணங்கள் வெகுவாக அதிகரித்தபோதும் COVID சம்பவங்கள் அதிகரிக்கவில்லை.
COVID-19 நோய் வேகமாகப் பரவியபோதும் சீனாவில் மக்கள் பயணம் செய்ய அது தடையாக அமையவில்லை.
நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி இருக்கிறது.
மில்லியன் கணக்கானோர் சொந்த ஊரில் விடுமுறையைச் செலவிட்ட பிறகு நகரங்களுக்குத் திரும்புகின்றனர்.
ஒரு வார விடுமுறையின்போது இடம்பெற்ற உள்நாட்டுப் பயணங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் 70 விழுக்காடு அதிகம்.
மொத்தம் 220 மில்லியனுக்கும் அதிகமான பயணங்கள் இடம்பெற்றன.
இதற்கிடையே பிரான்ஸ், சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்குக் COVID பரிசோதனை கட்டாயம் என்ற விதிமுறையை அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை நீட்டித்திருக்கிறது.