சீனா: பாலர் பள்ளியில் கத்திக்குத்துச் சம்பவம் - மூவர் மாண்டனர்
சீனாவின் சியாங்சி (Jiangxi) மாநிலத்திலுள்ள தனியார் பாலர் பள்ளியில் 48 வயது ஆடவர் ஒருவர் கத்தியோடு நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில் மூவர் மாண்டதாகவும் 6 பேர் காயமுற்றிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரைச் சீனப் பொதுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வலைவீசித் தேடுகின்றனர்.
பாதிப்படைந்தோரின் வயது விவரங்கள்
அறிவிக்கப்படவில்லை.
பொதுவாக இத்தகைய கடுமையான வன்முறைச் சம்பவங்கள் சீனாவில் இடம்பெறுவது அரிது என்றாலும் அண்மையில் கத்திக்குத்துச் சம்பவங்கள் அங்கு அதிகரித்து வருகின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் தென்சீனப் பகுதியில் உள்ள பாலர் பள்ளியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் 2 சிறுவர்கள் மாண்டனர்.