Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மும்பை கட்டடத்தில் தீ - இருவர் மரணம், பலர் காயம்

வாசிப்புநேரம் -

மும்பை நகரிலுள்ள பல மாடிக் குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் குறைந்தது இருவர் மாண்டனர். 

15க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

மும்பை நகரின் மையப் பகுதியிலுள்ள அந்த 20 மாடிக் கட்டடத்தில் தீயை அணைக்கவும் நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்களை மீட்கவும் பல தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.

கட்டடத்தின் 18ஆம் மாடியிலிருந்து தீ பரவும் காட்சிகளும், ஆகாயத்தில் புகை சூழ்ந்துள்ள காட்சிகளும் காணொளி ஒன்றில் பதிவாகின. 

தீயை அணைத்ததாகவும் மக்கள் காப்பாற்றப்பட்டனர் என்றும் நகர மேயர் Reuters செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். 

தீ மூண்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றார் அவர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்