இலங்கையின் முன்னைய அதிபர் அடுத்த வாரம் நாடு திரும்புவார்: உள்ளூர் ஊடகம்
இலங்கையின் முன்னைய அதிபர் கோத்தபாய ராஜபக்ச அடுத்த வாரம் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் அடுத்த புதன்கிழமை (24 ஆகஸ்ட்) திரும்புவார் என்று உள்ளூர் ஊடகமான Newsfirst தகவல் அளித்துள்ளது.
அவ்வாறு திரு. ராஜபக்சவின் உறவினரும் முன்னாள் தூதருமான திரு. உடையங்க வீரத்துங்க (Udayanga Weeratunga) கூறியதாக ஊடகம் சொன்னது.
கடந்த மாதம் நாடு தப்பிய திரு. ராஜபக்ச முதலில் மாலத் தீவுகளுக்குச் சென்றிருந்தார்.
அவர் பின்னர் சிங்கப்பூரில் சில வாரங்கள் கழித்தபோது அதிபர் பதவியிலிருந்து பதவி விலகினார்.
திரு. ராஜபக்ச தற்போது தாய்லந்தில் உள்ளார்.
-Reuters