Skip to main content
அறுவடைத் திருநாள்.. இந்தியாவில் வெவ்வேறு பெயர்களில்!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஆசியா

அறுவடைத் திருநாள்.. இந்தியாவில் வெவ்வேறு பெயர்களில்!

வாசிப்புநேரம் -
அறுவடைத் திருநாள்.. இந்தியாவில் வெவ்வேறு பெயர்களில்!

(படம்: Envato Elements)

அறுவடைத் திருநாள்..

இதை இந்தியாவில் மகர சங்கராந்தி என அழைப்பதுண்டு.

சூரியனை வழிபடும் தினமாகவும் அறுவடையைக் கொண்டாடும் நாளாகவும் அது பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் அது வெவ்வேறு முறைகளில் வெவ்வேறு மாதங்களில்  அனுசரிக்கப்படுகிறது.

Related article image
பொங்கல் (தமிழ்நாடு)

- தமிழர் திருநாள், உழவர் திருநாள் என்றழைக்கப்படும் பொங்கல் தை மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

- போகிப் பொங்கல், சூரியப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என 4 நாள்களுக்குக் கொண்டாட்டம்.
Related article image
(படம்: Envato Elements)
ஓணம் (கேரளா)

- கேரள மாநிலத்தில் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

- ஆண்டின் அறுவடைக் காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது

- ஒரு காலத்தில் கேரளாவை ஆட்சி செய்த மஹாபலி சக்கரவர்த்தி அன்றைய தினம் நினைவுகூரப்படுகிறார்.

- புராணக் கதைகளின்படி அவர் மக்களை ஓணம் தினத்தன்று மட்டும் சந்திப்பார் என்பது நம்பிக்கை.
Related article image
(படம்: Facebook)
சுகி (கர்நாடகா)

- பெண்கள் புத்தாடைகளை அணிந்து குடும்பத்தாரைச் சென்று சந்திப்பர்.

- அவர்கள் உலர்ந்த தேங்காய், வறுத்த கடலை, வெல்லம், இனிப்புப் பலகாரங்கள் போன்றவற்றைக் கொடுப்பார்கள்.

- கரும்பு அறுவடையின் தொடக்கத்தைக் கொண்டாட்டங்கள் குறிக்கின்றன.

- அந்த மாநிலத்தில் அதுவே ஆக முக்கிய விளைச்சல் என்று நம்பப்படுகிறது.
Related article image
(படம்: Facebook/Urbana Kolkata)
லோரி (பஞ்சாப்)

- மகர சங்கராந்திக்கு முதல் நாள்

- வட இந்தியாவில் அனுசரிக்கப்படுகிறது.

- குளிர் காலத்தின் இறுதிநாளாக அது கருதப்படுகிறது

- குளிர் விடைபெறுவதைக் குறிக்க வீட்டிற்கு வெளியே நெருப்பு மூட்டி அதைச் சுற்றி மக்கள் ஆடி மகிழ்வர்.
Related article image
(படம்: Instagram/@tahseenkarina)
வைசாகி (பஞ்சாப்)

- நல்ல அறுவடைக்குக் கடவுளுக்கு நன்றி சொல்லும் நாளாக அது அமைகிறது,

- சீக்கியர்களின் புத்தாண்டாகவும் அது கருதப்படுகிறது.

- பொதுவாக இது ஏப்ரல் மாதம் கொண்டாடப்படும்.

- வைசாகி ஊர்வலம், பாரம்பரிய நிகழ்ச்சிகள் ஆகியவை அன்று இடம்பெறும்.
Related article image
(படம்: Envato Elements)
உத்தரயனான் (குஜராத்)

- 2 நாள்களுக்கு அனுசரிக்கப்படும்.

- சூரிய வழிபாடு நடைபெறும்.

- அனைத்துலகப் பட்டம் விடும் விழா நடைபெறுவதால் "பட்டாங்" எனும் பட்டத்தைப் பறக்கவிடும் வாய்ப்பு கிடைக்கிறது.

- உத்தரயனான்போது அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிகழ்வாக அது அமைகிறது.

- உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் இந்த அறுவடைத் திருநாளை கிச்சடி (Khichdi) என்று அழைக்கிறார்கள்.
ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்