Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங் செல்லும் வெளிநாட்டுப் பயணிகளுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ளும் விதிமுறை தளர்த்தப்படலாம்

வாசிப்புநேரம் -

வெளிநாட்டுப் பயணிகள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற விதிமுறையை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த தகவல்களை ஹாங்காங் விரைவில் வெளியிடவிருக்கிறது. 

புதிய கொள்கை அடுத்த மாத நடுவில் நடப்புக்கு வரலாம் என்று ஆட்சிமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார்.

ஹாங்காங், கோவிட் தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்தக்கூடும் என்று ஏற்கெனவே வெளிவந்த உள்ளூர் ஊடகத் தகவல்களை அது உறுதிப்படுத்தியுள்ளது. 

ஹாங்காங்கிற்குள் நுழைவதற்கு முன்னர் கோவிட் நோய் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் 
PCR சோதனை முடிவும் இனி தேவையில்லை என்று கூறப்படுகிறது. 

நலிந்துபோன பொருளியலைத் தூக்கி நிறுத்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவேண்டும் எனும் நெருக்கடிக்கு ஹாங்காங் உள்ளாகியிருக்கிறது. 

குழுவுக்கு எழுவர் கொண்ட ரக்பி போட்டிகள், வங்கி மாநாடு போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு முன்னர் ஹாங்காங் கட்டுப்பாடுகளை  தளர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்