ஹாங்காங்கின் சுகாதாரப் பராமரிப்பு அமைப்புக்கு நெருக்குதல் ஏற்படலாம் - அதிகாரிகள் எச்சரிக்கை
ஹாங்காங்கின் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பு நெருக்குதலுக்கு உள்ளாகக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரிப்பதாலும் குளிர்காலம் நெருங்குவதாலும் அந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஹாங்காங்கில் நேற்று (நவம்பர் 24) 9000க்கும் அதிகமான சம்பவங்கள் உறுதியாயின.
சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு அதுவே ஆக அதிக எண்ணிக்கை.
கிருமிப்பரவல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு சமூக நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதால் கூடுதலானோர் நோய்வாய்ப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.