ஹாங்காங்: 150க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வருவோர் இடைவழிப் பயணம் மேற்கொள்ளத் தடை
வாசிப்புநேரம் -
ஹாங்காங்கில் 150க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வருவோர் இடைவழிப் பயணம் மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிருமித்தொற்றுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பயண நடவடிக்கைகளை அந்நகரம் முடுக்கிவிட்டுள்ளது.
ஹாங்காங்கிற்குள் நுழைவதற்கு முந்திய 21 நாள்களில், பாதிக்கப்பட்ட நாடுகளில் தங்கியிருந்த பயணிகளுக்கு அந்தத் தடை பொருந்தும்.
புதிய நடவடிக்கை, வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கி, ஒரு மாதம் நடப்பில் இருக்கும்.