Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்: வெள்ளிக்கிழமை முதல் வெளிநாட்டுப் பயணிகள் 3 நாள் தனிமைப்படுத்திக் கொண்டால் போதும்

வாசிப்புநேரம் -

ஹாங்காங் அரசாங்கம் அந்நகரின் தனிமையுத்தரவு விதிமுறைகளில் மாற்றத்தை அறிவித்திருக்கிறது.

வரும் வெள்ளிக்கிழமை முதல் வெளிநாட்டுப் பயணிகள் குறிப்பிட்ட ஓட்டல்களில் மூன்று நாள்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டால் போதும்.

தற்போது வெளிநாட்டுப் பயணிகள் அனுமதி பெற்ற தங்குமிடங்களில் ஒரு வாரத்துக்குத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 

தற்போது நடப்பில் உள்ள கெடுபடிகள் வெளிநாட்டுப்  பயணிகளுக்குத் தடையாக இருப்பதோடு, அனைத்துலக நிதி நடுவம் என்ற ஹாங்காங்கின் தகுதியையும் பாதிப்பதாகக் குறைகூறப்படுகிறது. 

கோவிட்19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் கட்டுப்பாடுகளைத் தளர்த்த ஹாங்காங் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்