இந்தியாவில் திடீரென்று 17% அதிகரித்த தினசரி COVID-19 விகிதம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், சுமார் 338,000 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் நோய்த்தொற்றின் தினசரி விகிதம் 17 விழுக்காடு உயர்ந்ததாக அரசாங்க அறிக்கை தெரிவித்தது.
இதுவரை இந்தியாவில் பதிவான மொத்த தொற்று எண்ணிக்கை சுமார் 39 மில்லியன்.
நேற்று மட்டும் கிருமித்தொற்றால் 488 பேர் மாண்டனர்.
இதுவரை இந்தியாவில் கிருமித்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை சுமார் 489,000.
தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பெரியவர்களில், 94 விழுக்காட்டினர் முதல் தடுப்பூசியைப் போட்டுள்ளனர். 72 விழுக்காட்டினருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.