இந்தியா 18 போர்விமானங்களை மலேசியாவுக்கு விற்க முனைகிறது
இந்தியா 18 தேஜாஸ் வகை இலகுரகப் போர்விமானங்களை மலேசியாவுக்கு விற்க முனைவதாக அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சுத் தெரிவித்துள்ளது.
ஆர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, எகிப்து, அமெரிக்கா, இந்தோனேசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளும் அந்தவகைப் போர்விமானத்தை இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ள விருப்பம் காட்டியுள்ளதாக அமைச்சுத் தெரிவித்தது.
வெளிநாட்டுத் தற்காப்பு ஆயுதங்களை நம்பியிருக்காமல் உள்ளூர் அளவில் அவற்றை உற்பத்திச் செய்ய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகம் முனைகிறது.
அதேவேளையில் இந்தியாவில் தயாராகும் தேஜாஸ் போர்விமானங்களை அரசதந்திரரீதியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.