இந்தோனேசியாவின் மத்திய வங்கியில் இணையத் தாக்குதல்
வாசிப்புநேரம் -
இந்தோனேசியாவின் மத்திய வங்கியில் இணையத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
Ransomware எனும் ஆபத்து விளைவிக்கும் மென்பொருள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
ஆனால் தாக்குதலால் இருக்கக்கூடிய ஆபத்து அகற்றப்பட்டதாக வங்கிப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தாக்குதலில் இடம்பெற்ற ஆபத்து Bank Indonesia வங்கியின் பொதுச் சேவைகளைப் பாதிக்கவில்லை என்பதும் தெரிவிக்கப்பட்டது.
அது பற்றிய மேல்விவரம் ஏதும் வழங்கப்படவில்லை.
ஆதாரம் : CNA