இந்தோனேசியாவில் அதிகரிக்கும் ஓமக்ரான் கிருமித்தொற்று
இந்தோனேசியா முழுவதும் ஓமக்ரான் கிருமிப்பரவல் காரணமாக நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
ஆறு மாதம் காணாத அளவாக 24 மணி நேர இடைவெளியில் அங்கு 36 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டது.
வரும் நாள்களில் அந்த எண்ணிக்கை பன்மடங்கு பெருகக்கூடும்.
அதைச் சமாளிக்க மருத்துவமனைகளில் கிருமித்தொற்று நோயாளிகளுக்கான படுக்கைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படுகிறது.
தடுப்பூசி போடும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும் இந்தோனேசிய அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை.