ஒழுங்காக 'முடி' வெட்டத் தெரியவில்லை...உனக்கு எதற்குத் தலை? - 'வெட்டச்' சென்ற இடத்தில் வெட்டுக் குத்து
இந்தோனேசியாவில் தமது சிகை அலங்காரத்தில் அதிருப்தி அடைந்த ஆடவர் ஒருவர் முடி வெட்டியவரை 'வெட்டச்' சென்றிருக்கிறார்....அரிவாளால்.
சென்ற மாதம் 23ஆம் தேதி அந்தச் சம்பவம் நடந்ததாக இந்தோனேசிய ஊடகங்கள் தெரிவித்தன. மேற்கு ஜாவாவில் உள்ள ஒரு கடையில் முடி வெட்டிக் கொள்ளச் சென்ற ஆடவர், கையில் அரிவாளுடன் கடைக்குள் நுழைகிறார்.
அவரைக் கண்டதும் முடி வெட்டுபவர் ஓட்டம் எடுக்கிறார்.
அரிவாளுடன் வந்தவர் கோபமாகக் கத்துகிறார்.
கடையில் இருந்த கேமராவில் பதிவான சம்பவம் காணொளியாக memomedsos என்ற சமூக ஊடகப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
அது இணையத்தில் வேகமாகப் பரவியது.
அரிவாளுடன் வந்தவர், முடி வெட்டுபவரை விடாமல் துரத்திச் செல்கிறார். பிறகு என்னவாயிற்று என்பது தெரியவில்லை.
முடி தானே.... வளர்ந்த பிறகு விருப்பப்படி வெட்டிக் கொள்ளலாமே! அதற்காகவா வெட்டுக் குத்து "முடி"யவில்லை என்கின்றனர் இணையவாசிகள்.