புதுடில்லியில் தண்டவாளம் அருகே வசிக்கும் தமிழ்க் குடும்பங்கள்
நகரும் ரயில்களின் நடுவே நகர்கிறது ஜல் விகார் மதராசி முகாமில் வசிக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கை. புதுடில்லியில் அந்தக் குடியிருப்பு அமைந்துள்ளது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
நகரும் ரயில்களின் நடுவே நகர்கிறது ஜல் விகார் மதராசி முகாமில் வசிக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கை. புதுடில்லியில் அந்தக் குடியிருப்பு அமைந்துள்ளது.
அங்கு தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2,500 குடும்பங்கள் வசிக்கின்றன.
அங்கிருக்கும் சுமார் 12,000 பேருக்கு மின்சார, குடிநீர் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. சிறுவர்களுக்குக் கல்வியும் பெரியவர்களுக்கு வேலை வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
அந்தக் குடியிருப்பைப் பற்றி மேல்விவரங்களை வழங்குகிறார் எமது நிருபர் சஹீரா பேகம்.