இந்தியாவுக்குச் செல்கிறார் ஜப்பானியப் பிரதமர்
வாசிப்புநேரம் -
ஜப்பானியப் பிரதமர் ஃபூமியோ கிஷிடா (Fumio Kishida) இன்று இந்தியாவுக்குச் செல்கிறார்.
இரண்டு நாள் பயணத்தின்போது அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பார்.
ஆசிய பசிபிக் வட்டாரத்தில் வளர்ந்து வரும் சீனாவின் ஆதிக்கத்தைச் சமாளிப்பது குறித்து திரு. கிஷிடா பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வட்டாரத்தைத் திறந்த, கட்டுபாடற்ற பகுதியாக வைத்திருப்பது பற்றிய புதிய திட்டத்தை அவர் அறிவிப்பார் என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.
புதிய திட்டத்தின்படி வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஜப்பான் கூடுதல் ஆதரவைத் தரும் என்று ஜப்பானிய அதிகாரிகள் கூறினர்.
இரண்டு நாள் பயணத்தின்போது அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பார்.
ஆசிய பசிபிக் வட்டாரத்தில் வளர்ந்து வரும் சீனாவின் ஆதிக்கத்தைச் சமாளிப்பது குறித்து திரு. கிஷிடா பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வட்டாரத்தைத் திறந்த, கட்டுபாடற்ற பகுதியாக வைத்திருப்பது பற்றிய புதிய திட்டத்தை அவர் அறிவிப்பார் என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.
புதிய திட்டத்தின்படி வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஜப்பான் கூடுதல் ஆதரவைத் தரும் என்று ஜப்பானிய அதிகாரிகள் கூறினர்.