Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்தில் வீட்டிற்குள் நுழைந்த நல்ல பாம்பு... அதிர்ஷ்டக் குலுக்குச் சீட்டை வாங்க விரைந்த சிலர்

வாசிப்புநேரம் -
தாய்லந்தின் பயாவ் (Phayao) மாநிலத்தில் தனீட்டா சைசுக்கோசோன் (Thanita Chaisukkoson) என்ற பெண்ணின் வீட்டிற்குள் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது.

1.5 மீட்டர் நீளமுள்ள அந்தப் பாம்பை வீட்டை விட்டு வெளியேற்ற அவர் பயாவின் பேரிடர் தடுப்பு, தணிப்புப் பிரிவை உதவிக்கு அழைத்ததாக The Thaiger செய்தி நிறுவனம் கூறியது.

வீட்டுவேலை செய்துகொண்டிருந்தபோது அந்தப் பாம்பைக்
கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனதாகக் கூறிய மாது, உடனடியாகக் குடும்பத்தினரிடம் அதுபற்றித் தெரிவித்தார்.

அதிகாரிகள் கயிற்றையும் குச்சிகளையும் பயன்படுத்திப் பாம்பை பைக்குள் போட்டு அதனைக் காட்டில் விட்டதாக The Thaiger தெரிவித்தது.

அங்குக் குடியிருந்தவர்கள், அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் எனும்
எண்ணத்தில் மறுநாள் அதிர்ஷ்டக் குலுக்குச் சீட்டுகளை வாங்கியதாகக் கூறப்பட்டது.

தாய்லந்தில் வீட்டிற்குள் பாம்பு நுழைவது அதிர்ஷ்டத்தைக் குறிப்பதாகச் சிலர் நம்புகின்றனர்.!
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்