ஆசியா சுடச்சுட
"மலேசியாவில் புதிய அரசாங்கத்தை யார் அமைப்பது என்பதைக் கூடிய விரைவில் தீர்மானிப்பேன்"- மலேசிய மாமன்னர்
வாசிப்புநேரம் -
மலேசியாவில் யார் அடுத்த அரசாங்கத்தை அமைக்கப் போகிறார்கள் என்பதைக் கூடிய விரைவில் தாம் தீர்மானிக்கவிருப்பதாக மலேசிய மாமன்னர் அறிவித்துள்ளார்.
அரண்மனைக்கு வெளியே காத்திருந்த செய்தியாளர்களைச் சந்தித்தபோது மாமன்னர் அவ்வாறு தெரிவித்தார்.
"நாட்டின் நலனுக்காக விவேகமாக முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. கூடிய விரைவில் அந்த முடிவை அறிவிப்பேன்," என்று மாமன்னர் கூறியுள்ளார்.
மலேசிய அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேசிய முன்னணி யாருக்கும் ஆதரவு வழங்காது.
இப்போதைக்குத் தேசிய முன்னணி தொடர்ந்து எதிர்க்கட்சியாகச் செயல்படும் என இடைக்காலப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி முன்னதாகக் கூறியிருந்தார்.
அரண்மனைக்கு வெளியே காத்திருந்த செய்தியாளர்களைச் சந்தித்தபோது மாமன்னர் அவ்வாறு தெரிவித்தார்.
"நாட்டின் நலனுக்காக விவேகமாக முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. கூடிய விரைவில் அந்த முடிவை அறிவிப்பேன்," என்று மாமன்னர் கூறியுள்ளார்.
மலேசிய அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேசிய முன்னணி யாருக்கும் ஆதரவு வழங்காது.
இப்போதைக்குத் தேசிய முன்னணி தொடர்ந்து எதிர்க்கட்சியாகச் செயல்படும் என இடைக்காலப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி முன்னதாகக் கூறியிருந்தார்.
ஆதாரம் : AGENCIES