Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மியன்மாரின் ராணுவ அரசாங்கத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை - குறைந்தது 4 படைவீரர்கள் மரணம்

மியன்மாரின் ராணுவ அரசாங்கத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மூண்ட சண்டையில் குறைந்தது 4 படைவீரர்கள் மாண்டனர்.

வாசிப்புநேரம் -

மியன்மாரின் ராணுவ அரசாங்கத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மூண்ட சண்டையில் குறைந்தது 4 படைவீரர்கள் மாண்டனர்.

வட மாநிலமான ஷானில் உள்ள நகரம் ஒன்றில், 3 குழந்தைகள் உள்பட 6 பொதுமக்கள் காயமுற்றனர்.

மியன்மாரில், ராணுவம் கடந்த ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து அது போன்ற சம்பவங்கள் சாதாரணமாகிவிட்டன.

தென் பகுதியில் உள்ள காயின் மாநிலத்தில் மூண்ட கலவரங்களில் இன்னும் கூடுதலாக 4 படைவீரர்கள் மரணமடைந்தனர்.

கடந்த வாரம் கலவரம் தொடங்கியதிலிருந்து குறைந்தது 80 படைவீரர்கள் மாண்டனர்.

அண்மையில், காயா மாநிலத்தில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாண்டதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம், மியன்மார் மீது கூடுதல் தடைகளை விதிக்கப்போவதாகத் தெரிவித்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்