மியன்மாரின் ராணுவ அரசாங்கத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை - குறைந்தது 4 படைவீரர்கள் மரணம்
மியன்மாரின் ராணுவ அரசாங்கத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மூண்ட சண்டையில் குறைந்தது 4 படைவீரர்கள் மாண்டனர்.
மியன்மாரின் ராணுவ அரசாங்கத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மூண்ட சண்டையில் குறைந்தது 4 படைவீரர்கள் மாண்டனர்.
வட மாநிலமான ஷானில் உள்ள நகரம் ஒன்றில், 3 குழந்தைகள் உள்பட 6 பொதுமக்கள் காயமுற்றனர்.
மியன்மாரில், ராணுவம் கடந்த ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து அது போன்ற சம்பவங்கள் சாதாரணமாகிவிட்டன.
தென் பகுதியில் உள்ள காயின் மாநிலத்தில் மூண்ட கலவரங்களில் இன்னும் கூடுதலாக 4 படைவீரர்கள் மரணமடைந்தனர்.
கடந்த வாரம் கலவரம் தொடங்கியதிலிருந்து குறைந்தது 80 படைவீரர்கள் மாண்டனர்.
அண்மையில், காயா மாநிலத்தில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாண்டதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம், மியன்மார் மீது கூடுதல் தடைகளை விதிக்கப்போவதாகத் தெரிவித்தது.