Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

புதுடில்லி வர்த்தகக் கட்டடத்தில் தீ - 27 பேர் மரணம்

வாசிப்புநேரம் -

இந்தியத் தலைநகர் புதுடில்லியிலுள்ள வர்த்தகக் கட்டடத்தில் மூண்ட பெரும் தீயில் 27 பேர் சம்பவ இடத்திலேயே மாண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

நேற்று (13 மே) பிற்பகல் 4 மாடிக் கட்டடத்தில் தீப்பற்றியது. 

அப்போது சுமார் 70 பேர் வளாகத்தில் இருந்தனர். 

தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை அடையாளங்காணப்படவில்லை.

கட்டடம் தீயணைப்புப் பிரிவிலிருந்து பாதுகாப்பு அங்கீகாரத்தைப் பெற்றியிருக்கவில்லை என்று அதிகாரிகள் கூறினர். 

கட்டடத்தில் அவசரகால வெளியேறும் வாயிலும் தீயணைப்புக் கருவியும் இல்லை என்று குறிப்பிடப்பட்டது.

பெரும்பாலோர் மூச்சுத் திணறலால் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிலர் தீயிலிருந்து தப்பிக்கக் கட்டடத்திலிருந்து குதித்தனர்.

சம்பவத்தில் கிட்டத்தட்ட 24 பேர் காயமடைந்ததாக அதிகாரி ஒருவர் சொன்னார்.

சம்பவம் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.

- AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்