வட கொரியாவில் COVID-19 நோய்ப்பரவல் தணியும் அறிகுறி
வட கொரியாவில் COVID-19 நோய்ப்பரவல் தணியும் அறிகுறி தென்படுகிறது.
அங்கு தொடர்ந்து மூன்றாவது நாளாக, புதிதாக 200,000க்கும் குறைவானவர்களுக்குக் காய்ச்சல் அறிகுறி அடையாளம் காணப்பட்டுள்ளது.
கிருமிப்பரவலை அரசாங்கம் திறமையாய்ச் சமாளித்துவருவதாக வட கொரியாவின் KCNA செய்தி நிறுவனம் தெரிவித்தது.
தற்போது நிலவரம் கட்டுக்குள் இருப்பதாகவும் அது சொன்னது.
போதிய மருந்துப்பொருள்கள் இல்லாததாலும் மோசமான சுகாதாரக் கட்டமைப்பாலும் வட கொரியா குறித்து அனைத்துலக அளவில் அக்கறை எழுந்துள்ளது.