புவியீர்ப்பு ஏவுகணைகளை மீண்டும் சோதனை செய்துள்ள வடகொரியா
வடகொரியா, அதன் கிழக்குக் கரையோரத்திலிருந்து புவியீர்ப்பு ஏவுகணைகளை மீண்டும் சோதனை செய்திருக்கிறது.
ஜப்பான் கடலை நோக்கி வடகொரியா 3 ஏவுகணைகளைப் பாய்ச்சியதாகத் தென்கொரிய ராணுவம் தெரிவித்தது.
அவை குறுந்தொலைவு ஏவுகணைகள் என்று கூறப்பட்டது.
அதில் ஒன்று, அதன் சிறப்புப் பொருளியல் வட்டாரத்திற்கு வெளியே விழுந்ததாக ஜப்பான் கரையோரக் காவற்படை தெரிவித்தது.
வடகொரியா இவ்வாண்டில் இதுவரை 10க்கும் மேற்பட்ட ஏவுகணைச் சோதனைகளை நடத்தியிருக்கிறது.