Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

விமானப் பயணத்தின்போது அவசரகாலக் கதவு திறக்கப்பட்டது - 9 பயணிகள் மருத்துவமனையில்

வாசிப்புநேரம் -
விமானப் பயணத்தின்போது அவசரகாலக் கதவு திறக்கப்பட்டது - 9 பயணிகள் மருத்துவமனையில்

(படம்: YONHAP / AFP)

Asiana விமானப் பயணி ஒருவர் விமானத்தின் அவசரகாலக் கதவை விமானம் தரையிறங்குவதற்கு முன்பு திறந்ததாக விமான நிறுவனம் தெரிவித்தது.

தென்கொரியாவில் உள்ள Daegu அனைத்துலக விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கினாலும் 9 பயணிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

சம்பவம் நேற்று (26 மே) நேர்ந்தது.

அந்த உள்ளூர் விமானத்தில் 200 பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர்.

கதவு எதிர்பாராமல் திறக்கப்பட்டதும் சில பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

யாருக்கும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று Asiana விமான நிறுவனம் தெரிவித்தது.

கதவைத் திறந்த பயணி காவல்துறையினரால் விசாரிக்கப்படுகிறார் என்றும் அது கூறியது.
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்