மரணம் விளைவித்த உடல் இளைக்கும் மருந்து - விற்பனை அதிகாரி கைது
வாசிப்புநேரம் -
தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் உடல் இளைக்கும் மாத்திரையை உட்கொண்டு நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், துணை உணவுப்பொருள் விற்பனை அதிகாரி ஒருவர் கைதாகியுள்ளார்.
மரணச் சம்பவங்கள் 2018ஆம் ஆண்டு நடந்தன.
அந்த நால்வர் உட்கொண்ட மாத்திரையில் தடை செய்யப்பட்ட பொருள்கள் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மாத்திரைகளில் பசியைக் கட்டுப்படுத்தக்கூடிய sibutramine hydrochloride மருந்து கலந்திருந்தது.
பல நாடுகளில் இதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
bisacodyl எனும் மலமிளக்கியும் அதில் கலக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நுட்டாவாட் (Nuttawat) எனும் அந்த 50 வயது அதிகாரி முன்னதாக கைதுசெய்யப்பட்டார். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
நீதிமன்றம் செல்லத் தவறியதற்காக இந்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி அவருக்கு மீண்டும் கைதாணை பிறப்பிக்கப்பட்டது.
அதிகாரிகள் தற்போது அவரைக் கண்டுபிடித்துக் கைது செய்துள்ளனர்.
மரணச் சம்பவங்கள் 2018ஆம் ஆண்டு நடந்தன.
அந்த நால்வர் உட்கொண்ட மாத்திரையில் தடை செய்யப்பட்ட பொருள்கள் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மாத்திரைகளில் பசியைக் கட்டுப்படுத்தக்கூடிய sibutramine hydrochloride மருந்து கலந்திருந்தது.
பல நாடுகளில் இதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
bisacodyl எனும் மலமிளக்கியும் அதில் கலக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நுட்டாவாட் (Nuttawat) எனும் அந்த 50 வயது அதிகாரி முன்னதாக கைதுசெய்யப்பட்டார். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
நீதிமன்றம் செல்லத் தவறியதற்காக இந்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி அவருக்கு மீண்டும் கைதாணை பிறப்பிக்கப்பட்டது.
அதிகாரிகள் தற்போது அவரைக் கண்டுபிடித்துக் கைது செய்துள்ளனர்.