ஷாங்ஹாயில் உயிருடன் சவக்கிடங்குக்கு அனுப்பப்பட்ட முதியவர் - பீதியடைந்த நகரவாசிகள்
ஷாங்ஹாயில் உயிருடன் இருந்த முதியவர் ஒருவரை மாண்டதாக நினைத்துச் சவக்கிடங்குக்கு அனுப்பிய சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பராமரிப்பு இல்லத்தைச் சேர்ந்த ஊழியர் தவறுதலாக முதியவர் இறந்துவிட்டதாக முடிவு செய்து சவக்கிடங்குக்கு அனுப்பிவிட்டார்.
சவக்கிடங்கு ஊழியர்கள் முதியவர் உயிருடன் இருப்பதை அறிந்தனர்.
முதியவர் மீண்டும் பராமரிப்பு இல்லத்துக்கு அனுப்பப்பட்டார்.
அந்தச் சம்பவம் ஷாங்ஹாய் நகரவாசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஷாங்ஹாயில் கடுமையான முடக்கநிலை பல வாரங்களாகத் தொடர்கிறது. ஏற்கனவே உச்சகட்ட அதிருப்தியில் உள்ள மக்களுக்கு, இத்தகைய சம்பவங்கள் மேலும் சினமூட்டுகின்றன.