Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென் கொரியாவில் நீட்டிக்கப்படும் கடுமையான COVID-19 கட்டுப்பாடுகள்

வாசிப்புநேரம் -

தென் கொரியா, ஓமக்ரான் கிருமிப்பரவலை முறியடிக்க  மேலும் மூன்று வாரத்துக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை நீட்டிக்கவுள்ளது. 

கடந்த இரண்டு வாரங்களில் அங்கு சமூக அளவில் பாதிக்கப்பட்டோர் விகிதம் 20 விழுக்காடு அதிகரித்துள்ளது. 

உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், புதிதாக நோய்த்தொற்று அடையாளம் காணப்படுவோர் எண்ணிக்கை 20,000-ஐ எட்டக்கூடும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்தனர். 

உணவகங்களும், மதுக்கூடங்களும் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்படலாம். அடுத்த மாதம் 6 ஆம் தேதி வரை அந்தக் கட்டுப்பாடு நீடிக்கும். 

ஆனால் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்ட 6 பேர் வரை தனிப்பட்ட ஒன்றுகூடலில் கலந்து கொள்ளலாம். முன்னர் நால்வர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்