தென்கொரியாவில் அதிகரித்துக் கொண்டிருக்கும் Omicron கிருமிப்பரவல்; விதிமுறைகள் நீட்டிப்பு
தென்கொரியா நடப்பில் உள்ள பாதுகாப்பு இடைவெளிக் கட்டுப்பாடுகளை இன்னும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்கீழ் தனியார் ஒன்றுகூடல்களில் அதிகபட்சமாக 6 பேர் வரை மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
உணவகங்கள், காப்பிக் கடைகள் ஆகியவை இரவு 9 மணி வரை மட்டுமே செயல்படமுடியும்.
தென்கொரியாவில் ஓமக்ரான் நோய்ப்பரவல் மோசமாகிவரும் வேளையில் தகவல் வெளிவந்துள்ளது.
அந்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 27,000க்கும் மேற்பட்டோருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
2 வாரங்களுக்கு முன்பு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் தினசரி எண்ணிக்கை சுமார் 6,000-ஆகப் பதிவாகியிருந்தன.