Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சுமத்ரா நிலநடுக்கத்தில் இருவர் மரணம்; இந்தோனேசியாவின் பக்கத்து நாடுகளில் அதிர்வுகள் உணரப்பட்டன

வாசிப்புநேரம் -

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் வடக்கே ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருவர் மாண்டதாகத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை சுமார் 9.40 மணியளவில் 6.2 ரிக்டர் நிலநடுக்கம் சுமத்ராவின் சில பகுதிகளை உலுக்கியது. அது 10 கிலோமீட்டர் ஆழத்திலிருந்து தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இந்தோனேசியாவின் பக்கத்து நாடுகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. நிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமிப் பேரலை ஏற்படுவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

மலேசியாவின் கோலாலம்பூர் மாநிலத்தில் சில பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மிக அதிகமாக உணரப்பட்டதால் சிலர் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

ஆனால் அங்கு யாரும் காயமடைந்ததாகவோ கட்டடங்கள் சேதமடைந்ததாகவோ தகவல் இல்லை.

செய்தி செயலி பல்வேறு புதிய அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.  இப்போதே ‘Update’ செய்யுங்கள் அல்லது ‘Mediacorp Seithi’ செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்