சில மாதங்களுக்குப் பின் தைவானில் மீண்டும் சமூக அளவில் COVID-19 தொற்று
தைவானிய அரசாங்கம் கிருமித்தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்கவுள்ளது.
அங்கு எதிர்பாரா விதமாக உள்ளூர் அளவில் ஓமக்ரான் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
தைவானில் கடந்த சில மாதங்களாகச் சமூக அளவில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாவது மிக அரிதாக இருந்தது.
தைவானில் தற்போது பதிவாகும் கிருமித்தொற்றுச் சம்பவங்களில் பெரும்பாலானவை ஓமக்ரான் வகையைச் சேர்ந்தவை.
கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் தைவானிய நகரான டாவ்யுவானிலுள்ள (Taoyuan) அனைத்துலக விமான நிலையத்துடன் தொடர்புடையவர்கள்.
வெளிநாட்டிலிருந்து வருவோரிடமிருந்து தொற்று தொடங்கியிருக்கும் என்று நம்பப்படுகிறது.