Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அதிர்வுகளுக்கு இடையிலும் நிலநடுக்கச் செய்தியைச் சுடச்சுட வழங்கிய பாகிஸ்தானியச் செய்திப் படைப்பாளர்

வாசிப்புநேரம் -

பாகிஸ்தானில் நிலநடுக்கத்துக்கு நடுவே Mashriq தொலைக்காட்சியின் செய்திப் படைப்பாளர் நிதானமாகச் செய்தி வாசிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகிறது.

அவர் நிலநடுக்கச்செய்தியைச் சுடச்சுட வாசித்துக்கொண்டிருந்தபோது நிலநடுக்கத்தின் அதிர்வுகள் செய்தியறையிலும் உணரப்பட்டன. 

கேமராக்கள் தொடங்கி அறை முழுவதும் அதிரும் காட்சிகள் காணொளியில் பதிவாகின. 

அறையில் இருந்து ஒருவர் வேகமாக வெளியேறுவதைக் காண முடிகிறது. ஆனால் செய்திப் படைப்பாளர் மட்டும் நிதானம் தவறாமல்  செய்திகளைப் படைத்துக்கொண்டிருந்தார்.

அவரது அந்தத் தைரியத்தை இணையவாசிகள் பாராட்டிவருகின்றனர். 

நேற்று (21 மார்ச்) ஆப்கானிஸ்தானை நிலநடுக்கம் உலுக்கியது.
அதன் அதிர்வுகள் பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் உணரப்பட்டன. 

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்