Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: 36 ஆண்டுகளாக ஆணாக நடித்துப் பெண் பிள்ளையை வளர்த்த தாய்

வாசிப்புநேரம் -

இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த 57 வயதுப் பெண், 36 ஆண்டுகளுக்கு ஆணாக நடித்து அவரது மகளை வளர்த்துள்ளார். 

பேச்சியம்மாள் என்ற அந்தப் பெண்ணின் கணவர் மாரடைப்பால் இறந்துபோனார். 

அதையடுத்து, பெண் குழந்தையை வளர்த்துப் பாதுகாப்பது அவருக்குக் கடினமாக இருந்தது. அவரது பாலினம் குறித்து வேலையில் பல்வேறு சங்கடங்களையும் இன்னல்களையும் சந்தித்தார். 

பிள்ளையை எப்படிப் பாதுகாப்பாக வளர்க்கப் போகிறோம்  என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் அவர் 'முத்து' என்ற பெயர் கொண்ட ஆணாக நடிக்க முடிவுசெய்தார்.

அவரது அதிகாரபூர்வ ஆவணங்களிலும் 'முத்து' என்று பெயரை மாற்றிக்கொண்டார்.

பேச்சியம்மாள் மகளை நல்ல நிலைக்குக் கொண்டுவந்துவிட்டார். அவரின் மகளுக்குத் திருமணமும் ஆகிவிட்டது. இருப்பினும் வாழ்க்கை முழுதும் முத்துவாகவே இருக்கப்போவதாகக் கூறுகிறார் பேச்சியம்மாள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்