இலங்கைக்குப் புதிய நிதியுதவி வழங்கத் திட்டமில்லை: உலக வங்கி
இலங்கையில் முறையான பொருளியல் கொள்கை கட்டமைப்பு வகுக்கப்படும்வரை, புதிய நிதியுதவியை வழங்கத் திட்டம் ஏதும் இல்லை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஒப்புதல் பெற்ற திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட வளங்கள், இலங்கை அரசாங்கத்துக்கு உதவும் விதத்தில் மாற்றிப் பயன்படுத்தப்படும் என்று வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இலங்கை அரசாங்கம், அத்தியாவசிய மருந்துகளை வாங்குவது உள்ளிட்ட ஆதரவு நடவடிக்கைகளுக்கு அது உதவியாக இருக்கும்.
இலங்கைகக்கு உலக வங்கி புதிய கடன்களை வழங்கத் திட்டமிடுவதாக வெளியான தகவல்கள் தவறானவை என்றும் அது குறிப்பிட்டது.