தேசிய நினைவுச் சின்னங்களின் பின்னால் தேசத்தின் சரித்திரமே உள்ளது...
தேசிய நினைவுச் சின்னங்கள், ஒரு புகழ்பெற்ற நபரை அல்லது சரித்திர நிகழ்வை நினைவுகூர்கின்றன.
தேசிய நினைவுச் சின்னங்கள், ஒரு புகழ்பெற்ற நபரை அல்லது சரித்திர நிகழ்வை நினைவுகூர்கின்றன.
கட்டடங்களுக்கும் இடங்களுக்கும் அந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
1971ஆம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னப் பாதுகாப்புக் கழகம் தொடங்கப்பட்டது.
ஜம்பது வருடங்களாகத் தொடரும் கூட்டு முயற்சியால் தற்போது 73 கட்டடங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
தேசிய நினைவுச்சின்னங்கள் வெறும் கட்டடங்கள் அல்ல... நம் நாட்டின் வளர்ச்சிக்குப் பின்னால் மறைந்திருக்கும் கதைகளையும் அவை பிரதிபலிக்கின்றன.
அந்தக் கதைகள் என்னென்ன? கட்டடங்களையும் நம் நாட்டின் வரலாற்றையும் இணைக்கும் தருணங்கள் யாவை? இன்றிரவு ஒன்பதரை மணிக்கு வசந்தத்தில் ஒளிபரப்பாகும் எதிரொலி நிகழ்ச்சியில் தெரிந்துகொள்வோம்.