குடும்ப வன்முறை... வீட்டுப் பிரச்சினை மட்டுமல்ல
இல்லம்...பாதுகாப்பாக இருக்கவேண்டிய இடம்...
இதுவே மனக்கசப்புக்கும் மனவுளைச்சலுக்கும் காரணமானால்?
கடந்த சில ஆண்டுகளாகக் கூடுதலான குடும்ப வன்முறைச் சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
கூடுதலான புகார்களும் அழைப்புகளும் செய்யப்படுவதற்குப் பொதுமக்களிடையே அதிகரித்துள்ள விழிப்புநிலையும் ஒரு காரணம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது ஒரு குடும்பத்தின் பிரச்சினை மட்டுமல்ல...இதில் சமூகத்தின் பங்கும் அவசியமான ஒன்று.
சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கும் காவல்துறைக்கும் குடும்ப வன்முறை குறித்த சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.