Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

மக்களை அதிகம் கவர்ந்துவரும் கடல் விளையாட்டு... எதிரொலி தயாரிப்பாளரின் அனுபவம்

காலை மணி ஏழுக்கு என் கடிகாரத்தின் அலறல் சத்தம் கேட்டதும் நான் அறக்கப்பறக்க வேலைக்குக் கிளம்பத் தொடங்குவேன். காலையிலிருந்து மாலை வரை வேலைசெய்து வீடு திரும்பியதும் ஓய்வெடுக்கத் தான் எனக்கு நேரம் கிடைக்கும்.

வாசிப்புநேரம் -

காலை மணி ஏழுக்கு என் கடிகாரத்தின் அலறல் சத்தம் கேட்டதும் நான் அறக்கப்பறக்க வேலைக்குக் கிளம்பத் தொடங்குவேன். காலையிலிருந்து மாலை வரை வேலைசெய்து வீடு திரும்பியதும் ஓய்வெடுக்கத் தான் எனக்கு நேரம் கிடைக்கும்.

ஆனால் கிருமிப்பரவல் சூழலால் என் வாழ்க்கையில் ஒரு திருப்பம். வீட்டிலிருந்து வேலைசெய்யும் ஏற்பாட்டினால் கையில் கூடுதல் நேரம் கிடைத்தது.. என்ன செய்யலாம் என யோசித்தேன்.

என்னைப் போன்றோர் என்னென்ன பொழுதுபோக்குகளில் இறங்கியுள்ளனர் என்பதை ஆராய ஆரம்பித்தேன்.

அதில் Stand-up Paddling எனும் ஒருவிதக் கடல் விளையாட்டு என்னை மிகவும் கவர்ந்தது. மிதவை ஒன்றின் மீது நின்றபடி, துடுப்பைக் கொண்டு படகைச் செலுத்துவதுபோல் நீரில் பயணம் செய்யவேண்டும்.

எவ்வளவோ முயன்றும் என் கால்கள் என் பேச்சைக் கேட்கவில்லை.. மீன் தரையில் தத்தளிப்பது போல் நான் நிற்க முடியாமல் தத்தளித்துக் கடலில் விழுந்த தருணங்கள் எனக்கும் அந்த அலைகளுக்கும் மட்டுமே தெரியும்!

ஆனால் அந்த அனுபவம் என் கண்களைத் திறந்தது. நேரத்தை வீணாகக் கழிப்பதற்குப் பதிலாகப் புதிதாக எதையாவது கற்றுக்கொள்ளவேண்டும் எனும் ஆவல் எழுந்தது.

இதுபோன்ற பல வித்தியாசமான பொழுதுபோக்குகளைப் பற்றித் தெரிந்துகொள்ள இன்றிரவு 9.30மணிக்கு வசந்தத்தில் ஒளிபரப்பாகும் எதிரொலி நிகழ்ச்சியைக் காணத் தவறாதீர்கள். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்