குறளும் பொருளும்
பல்லவி பாடுவது
கர்நாடக இசைப் பாடல்களில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று மூன்று பிரிவுகள் இருக்கும்.
இதில் பல்லவி என்பது திரும்பத் திரும்ப வரக்கூடிய வரிகளாகும்.
ஒருவர் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வதைப் பல்லவி பாடுதல் என்பர்.
(எ-டு) பிரச்சினைகளைப் பற்றியே பல்லவி பாடாமல் தீர்வுகளை யோசிக்கவேண்டும் என்று பெரியோர் அறிவுரை கூறுவர்.