Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

உலகத்தைச் சுற்றும் கடற் பயணத்தில் ஈடுபடும் முதல் பெண்கள் குழு

இந்தியாவைச் சேர்ந்த முதல் பெண்கள் குழு உலகத்தைச் சுற்றும் கடற் பயணத்தை நாளை தொடங்கவிருக்கின்றனர்.

வாசிப்புநேரம் -

இந்தியாவைச் சேர்ந்த முதல் பெண்கள் குழு உலகத்தைச் சுற்றும் கடற் பயணத்தை நாளை தொடங்கவிருக்கின்றனர்.  இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஆறு பெண் அதிகாரிகள் தங்கள் பயணத்தை கோவாவில் தொடங்குவர்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியக் கடற்படை,பெண்களுக்குச் சவால்மிக்க பொறுப்புகளை வழங்கிவருகிறது. அதில் இந்த முயற்சியும் அடங்கும்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த பயணத்தின் மூலம் இந்தியாவின் திறமைகளையும் பலத்தையும் உலகிற்கு எடுத்துக்காட்டுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, குழுவை ஊக்குவித்துள்ளார் .

ஆஸ்திரேலியா, நியூஸிலந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்குக் குழு செல்லும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் குழு கோவாவுக்குத் திரும்பித் தனது பயணத்தை முடித்துக்கொள்ளும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்